Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பல்வேறு வகையான பயன் தரும் பிரண்டை!

நவம்பர் 16, 2022 06:20

பிரண்டை... சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை... என பல வகைப் படும். இதற்கு, `வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு. `Cissus quadrangularis’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட இது, கொடி வகையைச் சேர்ந்தது. இந்தியா மற்றும் இலங் கையில் அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. இதன் சாறு உடலில்பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்ற.  இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது.

அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக் கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.

எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளி யாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக் கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படு வார்கள்.இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.

மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தி யை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரி மான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும்.  மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப் படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்; இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து. எலும்பு முறிவு ஏற்பட்டால், இதன் துவையலைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம். இளம் தண்டுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்து, நன்றாகக் காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப் போடுவதன் (பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுவது) மூலம் பலன் கிடைக்கும். எலும்பு முறிவு மட்டுமல்லாமல், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வலி உள்ள இடங்களிலும் இதைப் பூசிவர நிவாரணம் கிடைக்கும்.

பிரண்டை துவையல் செய்முறை:

முதலில் ஒரு கட்டு பிரண்டையை வாங்கி அதில் இருக்கும் நாரை எடுத்து பொடிதாக வெட்டி, அலசி சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் முத்திய பிரண்டையாக இருந்தால் அதில் நார் வரும். அந்த நாரை நீக்கி விடவேண்டும். பிரண்டையை உடைத்து எடுக்கும்போது நாரை கூடவே உறுத்து எடுக்க வேண்டும். அவ ரைக்காயை உரித்து நார் எடுப்போம் அல்லவா அதேபோல்தான்.  அடுத்தபடியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் 1 குழிக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதற்கு எண்ணெய் கொஞ்சம் கூடுதலாகத்தான் தேவைப் படும். அப்போதுதான் பிரண்டை துவையல் கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த எண் ணெய் காய்ந்தவுடன் கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், சிறிய நெல்லிக்காய் அளவு – புளி, பூண்டு – 2 பல், வர மிளகாய் – 6, தோலுரித்த சின்ன வெங்காயம் – 12 பல், இந்த பொருட்களை போட்டு முதலில் நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் லேசாக சுருங்கி வரும் வரை வதக்கினால் போதும். மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வதக்கி கொள்ளுங்கள். அடுத்தபடியாக பொடியாக வெட்டி வைத்திருக்கும் பிரண்டையை கடாயில் போட்டு எண்ணெயில் நன்றாக வதக்கவேண்டும். (ஒரு இன்ச் அளவிற்கு பிரண்டையை வெட்டி வைத்துக் கொண்டால் போதும்.) பச்சையாக இருக்கும் பிரண்டை, மஞ்சள் நிறத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும். சரியாக வதக்கவில்லை என்றால் பிரண்டையை சாப்பிடும்போது அரிப்பு ஏற்படும். -  பிரண்டை நன்றாக வெந்து வதங்கி வந்த பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, கடாயில் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். தக்காளியின் தோல் சுருங்கி வெந்து வரும் வரை வதக்க வேண்டும். அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த கலவை நன்றாக ஆறிய பின்பு அப்படியே அம்மியில் வைத்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் செம டேஸ்டா இருக்கும்.
 

தலைப்புச்செய்திகள்